Tuesday 21 May 2019


அறிவுத் தோட்டம்
( மாற்றங்களின்  நாற்றங்கால் )
காளாம்பட்டு கிராமம், வேலூர் மாவட்டம்
இயற்கை வேளாண்மை  - கருத்துக் களஞ்சியம்
( Organic Farming  &  Resource Repository )
--------------------------------------------------------------------------------------------
10 ஆண்டுகளுக்கு மேலாக  பராமரிப்பின்றி கிடந்த நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்பட காந்திருந்தது.  அழிந்து கொண்டிருந்த நிலம் கடந்த  6 ஆண்டுகளில் .  நூறு சதவீதம் இயற்கை வேளாண்மை  மூலம் பூஞ்சோலை ஆகியுள்ளது. அதுவே
அறிவுத்தோட்டம் .
 இயற்கை வேளாண்மை  இயல்பானதே, இலாபகரமானதே
 என பறை சாற்றி விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து களித்து விவசாயம் பற்றி கேட்டு அறிந்து செல்கிறார்கள். விவசாயமே அறியாத அவர்கள் உற்சாகத்துடன் வருவது  புதிய தலைமுறையினர் மீதான  நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது. 
நிறைந்து வழியும் இதன் மலர்ச்சியினை காவேரி ,பாலிமர், மெகா, ஜெயா மற்றும் மக்கள்    தொலைக்காட்சிகளில்  பலமுறை ஒளிபரப்பினர்.
அறிவுத்தோட்ட்த்தின் சிறப்புகளை  இந்தியன் எக்ஸ்பிரஸ் . டைம்ஸ் ஆப் இந்தியா,தினமணி,தினமலர் மற்றும் காலைக் கதிர் ஆகிய பத்திரிக்கைள் பிரசுரித்தன. On line  பேப்பர்  Better India, மற்றும்  the optimist citizen வெளிவந்து இந்திய அளவிலும்  ஒரு தேடலை உருவாக்கியது.
ஆற்காடு அரிசித்திருவிழா- 2019 இல் சிறந்த விவசாயப் பண்ணைவிருதினைப்பெற்றது.
தமிழ்நாடு  யூனியன்  ஆப் ஜெர்னலிஸ்டு ,வேலூரி மத்திய மாவட்டம்
 வேலூர் வைரம்என பட்டமளித்தது.
ரசாயனங்கள் கலக்காத  இயற்கைவழி முறைகளை அறிவியல் அணுகு முறைகளை மாநிலத்தின் பல பகுதியிலிருந்து விவசாயிகள் கேட்டறிவதும்  நேரில் வந்து பார்ப்பதுமாக உள்ளனர்.  
அறிவுத்தோட்ட்த்தில் அப்படி என்னதான் உள்ளது?
Ø பசுமை நிறைந்த தோட்டப் பயிர்கள், கத்தரி, தக்காளி, பச்சை மிளகாய்
Ø வளம் கொழித்த குளுமையும் அமைதியுமான மாந்தோப்பு.
Ø ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் தோப்பாக.
Ø பார்க்கவே பரவசமூட்டும் வாழைத் தோட்டம்.
Ø தொட்டாலே மணக்கும் எலுமிச்சை மரங்கள்.
Ø சப்போட்டா, நெல்லி, ஆரஞ்சு, மாதுளை , சீத்தா, சாத்துக்குடி, பப்பாளி பழ மரங்களாக தோட்டத்தில்.
Ø முகப்பில் வரவேற்கும் பூந்தோட்டம்: ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, பட்ரோஸ், செம்பருத்தி மற்றும் பலவகை சிறுமலர்களின் கூட்டம்.
Ø தோட்ட்த்தின் அரணாக புங்கை, வேப்ப மரங்கள் மற்றும் பல வகை மரங்கள் , வேலிகளுக்கு துணையாக காகிதப்பூக்கள்
Ø முகப்பில் கூட்டம் நடத்த அரங்கம் அமைத்து அழைக்கும் மரங்களின் குடை பிடிப்பு
Ø மூலிகைச் செடிகள் சிறப்பு கவனத்துடன் தனியாக பாத்திகள். துளசி, தூதுவலை, வல்லாரை, முடக்கறுத்தான், கல்யாண முருங்கை, சிறு குறிஞ்ஞான்  என 100 வகைகளுக்கு மேல் .
Ø பசும்தாள் உரம் ,மண்புழு உரம், பஞ்சகாவியா தயாரிப்பு.
Ø  நவீன தொழில்நுட்ப சொட்டுநீர் பாசனம்
Ø மழைநீர் சேகரிப்புக்கு தோட்ட்த்திலேயே பண்ணைக் குட்டை
Ø ஒவ்வொருமாதமும் மூன்றாம் ஞாயிறு விவாசாயிகள் சந்திப்பு நடைபெற்றுவருகிறது. தேனீ வளர்ப்பு, அசோலா வளர்ப்பு பயிற்சிகள் விவாசாஇகளுக்கு மிக்க பயனளித்து வருகிறது.
வருபவர்களுக்கு  விளையாட்டுகளுடன் பயிற்சிகளும் தரப்படுகிறது.
 உணவும் தோட்டத்திலேயே தயாரித்து வழங்கவும் ஏற்பாடு உள்ளது.

இயந்திர வாழ்வின்  இறைச்சலுக்கிடையில்  ,
இயற்கை நேசிப்பின் இசை
------------------------------------------------------------------------------------------------
அறிவுத் தோட்டம்  ஒரு  கற்கும் களம்
தொடர்புக்கு:   கு.செந்தமிழ்செல்வன்,  9443032436,      senthamil1955@gmail.com
------------------------------------------------------------------------------------------------