Wednesday 25 February 2015

கறார் முடிவு: வெட்டு ஒன்று துண்டு இரண்டு

படிப்பறிவு மட்டும் இன்றைய வாழ்வுக்குப் போதாது. சுழற்றி அடிக்கும் வாழ்க்கையின் பல்வேறு சூழலில் தைரியமாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் திறமை அவசியம் வேண்டும். இந்த திறன் பெறாததால் படித்தவர்கள் கூட இக்கட்டான தருணத்தில் தற்கொலைதான் முடிவு என வாழ்க்கையே முடித்து கொள்கிறார்கள்.
புத்தகங்களில் கிடைக்காத பல புதிய படிப்பினைகளை நாம் நம்மைச்சுற்றி நிகழ்வனவற்றை கூர்ந்து பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். மாமேதைகளிடம் என்பதில்லை சாதாரண மனிதர்களிடமும் சில ேரங்களில் அசாதரண முடிவுகளைக்காணலாம்.
சமீபத்தில் நமது தோட்டத்தில் ஒரு தொழிலாளியின் அனுபவத்தைக்கேட்டு அசந்து போனேன். இனி அப்படித்தான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தேவை வரும்போது முடிவு எடுக்கவேண்டும் என முடிவெடுத்தேன்.


அவர் ஒரு மரம் ஏறும் தொழிலாளி. ஒரு முறை தென்னை மரம் ஏறி தேங்காய் குலைகள் தள்ளும் போது மரத்தில் இருந்த பாம்பு இவரை கை நடுவிரலின் மத்தியில் கொத்திவிட்டது.இவர் தென்னைமரத்தில் இருந்து கீழே இறங்கி சிகிச்சை பெறுவதற்குள் விசம் தலைக்கேறிவிடும். பாப்புக்கடியின் வலியிலும் தென்னைமரத்தின் உச்சியில் மரணத்தின் போராட்டத்திலும் எந்த வித பதற்றமும் இன்றி ஒரு முடிவெடுத்தார். தன்னிடமிருந்த கத்தியாலேயே தனது விரலை பாம்பு தீண்டிய வரை வெட்டிக்கொண்டார். உயிருக்கு வந்த ஆபத்து பாதிவிரலோடு போனது. அதன் பிறகும் தன் தொழிலின் மீது எந்த வெறுப்பும் இன்றி தொடர்கிறார் என்பது தான் அதன் முத்தாய்ப்பு.
இந்த தெளிவும் தைரியமும்தானே நமக்கு வேண்டும்.

No comments:

Post a Comment